Friday, November 6, 2009

Vacation

சென்னைவாசிகளே...
வான வேடிக்கைகள் வேண்டாம்....
வண்ண அலங்காரம் வேண்டாம்....
வானுர்தி என் மண்ணை தொடுகையில்
மழை என்னை வரவேற்க காத்திருக்க
சொல்லுங்கள்.........! :)

Sunday, November 1, 2009

ஐந்தாம் பருவத்தில் !!!!!!!

காயமுற்று அழுதிட்டு
ஓடி வந்துன் மடி சாயுமென்
விழியோரத்து நீரை துடைத்திடும்
கணத்தில் குளமாகும் நின்
கண்களை துடைக்க முயன்ற
கைகள் தோற்றுன் கரம் பற்றுதடி
என் வலி மறந்து ........!!


(அஞ்சு வயசுல அடி பட்டு அம்மா கிட்ட அழுதுட்டு வரும் பொழுது நினைவில் நின்றது)